போரில் துடிதுடித்து நின்ற கர்ப்பிணி மூச்சு... உயிரை பிடித்து போராடிய குழந்தை மீட்பு

Update: 2024-04-23 08:59 GMT

காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் இருந்து பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளது. ரஃபா நகரில் இஸ்ரேல் படையினர் 2 வீடுகள் மீது தாக்குதல் நடத்தியதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 சிறுவர்கள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர். இதில், கர்ப்பிணியான சப்ரீன் அல் சகானி, அவரது கணவன் மற்றும் குழந்தையும் உயிரிழந்தனர். கர்ப்பிணியை மீட்ட மருத்துவர்கள், அவரது வயிற்றில் இருந்து பச்சிளம் குழந்தையை மீட்டனர். உடனடியாக சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளனர். தற்போது மற்ற குழந்தைகளுடன் இன்குபேட்டரில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்