மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ள நீர்: 17 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழப்பு

மெக்சிகோவில் மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளத்தில் சிக்கி 17 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர் கனமழை காரணமாக டுலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Update: 2021-09-09 08:56 GMT
வெள்ள நீர் மருத்துவனை ஒன்றிற்குள் புகுந்த நிலையில், 40க்கும் அதிகமான நோயாளிகளை மீட்புப் படையினர் மீட்டனர்.  கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் பெரும்பாலானவர்கள் உட்பட 17 நோயாளிகள் வெள்ள நீரில் மூழ்கி உயிருழந்தனர். இதனால் அந்நாட்டு அதிபர் ஆன்ட்ரஸ் மானுவேல் லோபஸ், மக்களை பாதிக்கப்பட்ட இடங்கலில் இருந்து வெளியேறி, உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்