சிட்னியில் புதிதாக 201 பேருக்குக் கொரோனா - ஊரடங்கிற்கு எதிரான மக்கள் போராட்டம்

ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் கொரோனா பரவல் அதிகரிக்கத் துவங்கியுள்ளதால் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Update: 2021-07-31 13:11 GMT
ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் கொரோனா பரவல் அதிகரிக்கத் துவங்கியுள்ளதால் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகர் சிட்னியில் புதிதாக 201 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் கடந்த வார இறுதியில், ஊரடங்கை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டம் மற்றும் அதன் விளைவாக போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பலர் கைது செய்யப்பட்ட விவகாரம் உலக அளவில் பேசு பொருளானது. இந்நிலையில், சிட்னி நகரில் கொரோனா பரவல் அதிகரிக்கத் துவங்கியுள்ளதால், போராட்டக் காரர்கள் நகருக்குள் நுழைய முடியாதபடி போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்