கியூபாவில் அரசுக்கு எதிரான போராட்டம் - பிரேசில் அதிபர் ட்விட்டர் பக்கத்தில் ஆதரவு
கியூபாவில் அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்திற்கு பிரேசில் அதிபர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கியூபாவில் அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்திற்கு பிரேசில் அதிபர் ஆதரவு தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் கடும் பொருளாதார நெருக்கடிகளால் கியூபா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விடுதலை முழக்கங்களுடன் கியூப அதிபர் மிகுல் டியாஸ் கெனல்லுக்கு எதிராக, ஆயிரக்கணக்கான கியூப மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதற்கு பிரேசில் அதிபர் ஜேர் பொல்சனரோ தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதரவை நல்கியுள்ளார்.