டிரம்பின் கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கம் - 2 ஆண்டுகளுக்கு முடக்கம்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் பேஸ்புக் கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் பேஸ்புக் கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளாத டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதற்கு டிரம்ப்பின் பேச்சுக்கள் மற்றும் சமூக வலைத்தள பதிவுகள் காரணமாக கருதப்படுகிறது. இதனையடுத்து டிரம்பின் டுவிட்டர் கணக்கை அந்நிறுவனம் நிரந்தரமாக தடை செய்தது. இந்நிலையில், டிரம்பின் பேஸ்புக் பக்க கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.