உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி : அரைகம்பத்தில் பறந்த அமெரிக்க தேசிய கொடி - அதிபர் டிரம்ப் உத்தரவு

அமெரிக்க நாடாளுமன்ற கலவரத்தில் இறந்த 2 போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தேசியக்கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டு உள்ளது.

Update: 2021-01-11 05:29 GMT
அமெரிக்க நாடாளுமன்ற கலவரத்தில் இறந்த 2 போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தேசியக்கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டு உள்ளது. அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் 2 போலீசார் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வெள்ளை மாளிகை, அமெரிக்க அரசு அலுவலகங்கள் உள்பட அனைத்து அரசு கட்டடங்களில் உள்ள தேசிய கொடியை அரைகம்பத்தில் பறக்க விட டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்