"இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்" - கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இலங்கை அரசு உத்தரவு

இலங்கை முழுவதும் வெள்ளிக்கிழமை முதல், வரும் 23-ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2020-03-20 19:34 GMT
இலங்கை அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கொரோனாத் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், நோய் நிவாரணக் கட்டளைச் சட்டத்தின் கீழ், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 23-ஆம் தேதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை இந்த உத்தரவு அமுலில் இருக்கும் என கூறியுள்ள இலங்கை அரசு, உத்தரவை மீறுவோருக்கு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறக் கூடாது எனவும், அத்தியாவசியத் தேவை மற்றும் செய்தியாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை அரசு தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்