"அவசியம் ஏற்பட்டால் வடகொரியா மீது படைகளை பயன்படுத்துவோம்" - அமெரிக்க அதிபர் டிரம்ப்

அவசியம் ஏற்பட்டால் வடகொரியா மீது படைகளை பயன்படுத்த தவற மாட்டோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-03 18:33 GMT
அவசியம் ஏற்பட்டால் வடகொரியா மீது படைகளை பயன்படுத்த தவற மாட்டோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடகொரியாவுடன் நட்புறவுடன் இருந்து வருவதாகவும் கூறினார். பிரிட்டன் தேர்தல் விவகாரத்தில் தாம் தலையிட விரும்பவில்லை என்றும் ஆனால்  தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் அப்பதவிக்கு மிகவும் தகுதி ஆனவர் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்