பிரான்ஸ் நாட்டில் களைகட்டிய இரட்டையர்கள் திருவிழா
பிரான்ஸ் நாட்டின் பிளேகாடக் நகரில் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டையர்கள், மூவர்கள் திருவிழா களைகட்டியது.
பிரான்ஸ் நாட்டின் பிளேகாடக் நகரில், ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டையர்கள், மூவர்கள் திருவிழா களைகட்டியது. நாடு முழுவதும் இருந்து ஆயிரத்து 500 பேர் இரட்டையர்கள் இதில் பங்கேற்றனர். ஒரே உடை அணிந்து வந்த அவர்கள், தங்களுக்குள் இருக்கும் அன்பு, சண்டை சச்சரவுகள் குறித்து சுவரஸ்யமாக விவாதித்துக் கொண்டனர். பின்னர், ஆட்டம், பாட்டம், விளையாட்டு போட்டி என இரட்டையர்கள் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.