இலங்கையை சென்றடைந்த சீன போர்க்கப்பல் : கடலோர பாதுகாப்பு உறுதி செய்யப்படும் - இலங்கை

சீனா அன்பளிப்பாக வழங்கிய பி-625 என்ற அந்நாட்டின் போர்க் கப்பல் இலங்கையை சென்றடைந்தது.

Update: 2019-07-18 00:02 GMT
சீனா அன்பளிப்பாக வழங்கிய பி-625 என்ற அந்நாட்டின் போர்க் கப்பல் இலங்கையை சென்றடைந்தது. நட்புறவு மூலம் வழங்கப்பட்ட இந்தப் போர்க் கப்பல், கடந்த வாரம் இலங்கை ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. இந்தக் கப்பல் மூலம் கடலோர பாதுகாப்பை பலப்படுத்த உள்ளதாக, இலங்கை தெரிவித்துள்ளது. கரையில் இருந்து ஊடுருவலை தடுக்கவும், கடலுக்குள் நிலவும் பருவ நிலை தொடர்பான தகவலை அறியவும், எதிரிகளை தடுக்கவும் இந்தக் கப்பல் பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக, 43 ரயில்களை சீனா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்