பிரேசில் : மனதை கவரும் இனிப்பு அருங்காட்சியகம் - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாட்டம்

பிரேசில் நாட்டில் திறக்கப்பட்டுள்ள இனிப்பு அருங்காட்சியகம் குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவரின் மனதையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

Update: 2019-07-14 08:51 GMT
பிரேசில் நாட்டில் திறக்கப்பட்டுள்ள இனிப்பு அருங்காட்சியகம் குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவரின் மனதையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. மகிழ்ச்சியின் அடையாளமாக இனிப்பு சாப்பிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த இனிப்பு அருங்காட்சியகம் பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. 15க்கும் மேற்பட்ட அறைகளில் முழுவதுமாக இனிப்பு வகைகளின் பெரிய அளவிலான மாதிரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாதிரி சாக்லேட்டுகள், மிட்டாய்கள், ஐஸ்கிரீம் அறை என அனைத்தும் கண்ணை கவரும் வண்ணம் அமைந்துள்ள நிலையில், இந்த இனிப்பு அருங்காட்சியகம் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்