"இலங்கை போர்க்குற்றத்திற்கு நீதி கேட்பதை கைவிடுங்கள்" - தமிழ் மக்களுக்கு, பிரதமர் ரனில் விக்கிரம சிங்கே வலியுறுத்தல்
இலங்கை போர்க்குற்றங்களுக்கு நீதி கேட்பதை கைவிடுமாறு தமிழ் மக்களை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை போர்க்குற்றங்களுக்கு நீதி கேட்பதை கைவிடுமாறு தமிழ் மக்களை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் குற்றம் இழைத்தவர்களுக்கு மன்னிப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ் மக்களுடன் மோத வேண்டிய தேவை தமக்கு இல்லை எனக் குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்கே, யுத்தத்தால் வடக்கு பிரதேசம் அதிகளவு பாதிப்பை எதிர்கொண்டதாகவும் தெரிவித்தார். இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கேயின், இந்த பேச்சுக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளான கூட்டமைப்பினர், எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.