மருத்துவமனையில் தீ விபத்து - 9 நோயாளிகள் பலி

தைவானில் உள்ள நியு தைபே நகர மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2018-08-13 11:07 GMT
தைவானில் உள்ள நியு தைபே நகர மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் 7வது மாடியில் தீ பிடித்ததால், அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் தீயில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து, தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்ட வார்டில் 32 நோயாளிகளும் 11 ஊழியர்களும் இருந்தனர். அவர்களில் 9 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 23 பேர், வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்