கொள்ளிடம் ஆற்றில் அதிர்ச்சி - பெண்ணை கடித்து குதறிய முதலை

Update: 2024-04-28 04:25 GMT

கொள்ளிடம் ஆற்றில் அதிர்ச்சி - பெண்ணை கடித்து குதறிய முதலை

காட்டுமன்னார்கோயில் அருகே ஆற்று கரையோரம் கால்நடைகளை மேய்த்து கொண்டிருந்த மூதாட்டியின் காலை முதலை பயங்கரமாக கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடுக்கஞ்சங்கொல்லை கிராமத்தை சேர்ந்த சின்னம்மா என்பவர் கொள்ளிடம் ஆற்றில் கால்நடைகளை மேய்த்து கொண்டிருந்தபோது, கரையோரம் படுத்திருந்த முதலை திடீரென மூதாட்டியின் காலை கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்த அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்