நெல்லை, தூத்துக்குடி மக்கா - ரயில்வே உங்களுக்கு சொன்ன நல்ல சேதி

Update: 2024-04-24 03:17 GMT

சித்திரை பவுர்ணமியையொட்டி, திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, நெல்லை சந்திப்பில் இருந்து காலை 4.60 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு, 8.15 மணிக்கு திருச்செந்தூரை அடையும். காலை 11.25 மணிக்கு நெல்லையில் புறப்படும் மற்றொரு ரயில் மதியம் ஒரு மணிக்கு திருச்செந்தூரை வந்தடையும். மறு மார்க்கத்தில், திருச்செந்தூரில் காலை 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் 10.50க்கு நெல்லைக்கு வந்தடையும். மற்றொரு ரயில் மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு 3 மணிக்கு நெல்லையை அடையும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்