சட்டமன்றம் விவகாரம் - ஐகோர்ட்டில் தகவல் சொன்ன தமிழக அரசு

Update: 2024-04-17 07:22 GMT

சட்டமன்றம் விவகாரம் - ஐகோர்ட்டில் தகவல் சொன்ன தமிழக அரசு

சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பாக, பல்வேறு மாநிலங்களிடம் தகவல் கோரப்பட்டுள்ளதாகவும், முழுமையான தகவல்கள் கிடைத்தபின் இது சம்பந்தமாக முடிவெடுக்கப்படும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான வழக்குகள் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பாக, பல மாநிலங்களிடம் தகவல் கோரப்பட்டதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டன. சில மாநிலங்கள் பதிலளித்துள்ளன, சில மாநிலங்கள் பதிலளிக்கவில்லை என்றும், நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து சபாநாயகர் ஆய்வு செய்து வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. முழுமையாக தகவல் கிடைத்த பின் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. எவ்வளவு காலம் ஆய்வு செய்யப்படும் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஏதேனும் ஒரு இறுதி முடிவு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்து, விசாரணையை ஜூன் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்