மாவோயிஸ்டுகள் மிரட்டல் - நீலகிரியில் தொற்றிய பரபரப்பு - களத்தில் இறங்கிய ஐ.ஜி

Update: 2024-04-26 12:22 GMT

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே தமிழக கேரள எல்லை பகுதிகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். வயநாடு அருகே தமிழர்கள் வசிக்கக் கூடிய பகுதிகளில் வாக்களிக்க கூடாது என மாவோயிஸ்டுகள் மிரட்டல் விடுத்துச் சென்றதாக அண்மையில் சர்ச்சை எழுந்தது. மேலும், இன்று கேரளாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்பேரில், சோதனை சாவடிகளில் மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக பாட்டவயல், நம்பியார்குன்னு, தாளூர், சோலாடி உள்ளிட்ட சோதனை சாவடிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்