திமுக, அதிமுக வேட்பாளர்கள், எம்எல்ஏ மீது பாய்ந்த வழக்கு - கள்ளக்குறிச்சியில் தொற்றிய பரபரப்பு

Update: 2024-03-28 08:40 GMT

கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் மலையரசன், வேட்புமனு தாக்கல் செய்த போது, தேர்தல் நடத்தை விதிமீறியதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் மலையரசன் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோல் அதிமுக வேட்பாளர் குமரகுரு, வேட்பு மனு தாக்கலின்போது ஆயிரம் பேருடன் ஊர்வலமாக வந்து தேர்தல் நடத்தை விதிமீறியதாக வழக்கு பதியப்பட்டது. இது தொடர்பாக உதவி ஆய்வாளர் சிவச்சந்திரன் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தி.மு.க, அ.தி.மு.க.வேட்பாளர் உள்பட 1,015 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்