"தலைமை செயலகத்தில் வேலை" - சட்டக்கல்லூரி மாணவர் தீட்டிய பலே பிளான்

Update: 2024-04-27 07:07 GMT

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த சத்யராஜ் என்பவர், அப்பகுதியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் கார்த்திக் என்பவர் மீது, காவல் நிலையத்தில் பணமோசடி புகார் அளித்தார். அதில், தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி கார்த்திக் 3 லட்ச ரூபாய் கேட்ட நிலையில், ஒரு லட்ச ரூபாய் பணத்தை முதல் தவணையாக தந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் பின்பு வேலை குறித்து கேட்டதற்கு, தகாத வார்த்தைகளில் பேசியும், ரவுடிகளை வைத்து தாக்குவதாகவும் கார்த்திக் மிரட்டியதாக, சத்யராஜ் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் கார்த்திக்கிடம் இருந்து பணத்தை மீட்டுத்தரவும் சத்யராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர் கார்த்திக்கை கைது செய்த போலீசார், அறந்தாங்கி கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்