"கொலுசு கட ஓரத்திலே... தாசில்தார் போட்ட" - கிராமத்து குத்து" - வியந்துபோன ஊழியர்கள்

Update: 2022-07-27 08:30 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை வட்டாட்சியர் குத்தாட்டம் போட்டு வரவேற்றார். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான விழிப்புணர்வு ஜோதி திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய வட்டாச்சியர் அலுவலகங்களுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது, வாணியம்பாடி வட்டாச்சியர் சம்பத் மற்றும் வருவாய்துறையினர் சக அலுவலர்களுடன் குத்தாட்டம் போட்டு ஆரவாரத்துடன் ஒலிம்பியாட் ஜோதியை உற்சாகமாக வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்