தந்தையை கண்மூடித்தனமாக தாக்கிய மகன் - மாரடைப்பால் இறந்த பரிதாபம்

Update: 2024-04-26 05:47 GMT

பெரம்பலூரில் முதியவர் ஒருவரை அவரது மகன் கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரின் மனதை பதற வைத்துள்ளது.

படுகாயமடைந்த முதியவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 நாட்களில் குணமாகி வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி மது அருந்தி விட்டு உறங்கச் சென்ற முதியவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம் முதியவர் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முதியவர் மாரடைப்பால்தான் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனை நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்து வந்த போலீசார்... ஆபாசமாக பேசுதல், கொடுங்காயம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் முதியவரின் மகன் மீது வழக்குபதிவு செய்து அவரை சிறையில் அடைத்திருக்கின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்