தொழிலாளி கல்லால் அடித்து கொலை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Update: 2024-04-24 02:30 GMT

சுமை தூக்குவதில் ஏற்பட்ட தகராறில், சக தொழிலாளியை கல்லால் அடித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பூங்காவனம். சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் பணியாளரான இவருக்கும், சக தொழிலாளியான அரக்கோணத்தை சேர்ந்த குமார் என்பவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில், பூங்காவனம் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் குறித்தான வழக்கு சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், குமாருக்கு ஆயுள் தண்டையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்த நீதிபதி, உயிரிழந்த பூங்காவனத்தின் மனைவிக்கு தமிழக அரசு 5 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்