`குட்டி யானைக்குள் பெட்டி பெட்டியாக..' - பறக்கும் படையினருக்கு காத்திருந்த ஷாக்

Update: 2024-04-18 02:20 GMT

`குட்டி யானைக்குள் பெட்டி பெட்டியாக..' - பறக்கும் படையினருக்கு காத்திருந்த ஷாக்

#liquor #flyingsquad #tataace #chennai #thanthitv

சென்னை, தாம்பரம் அருகே.. 3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையின் போது பறிமுதல் செய்தனர். தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், அவ்வழியே வந்த சரக்கு வாகனம் ஒன்றை மறித்து சோதனையிட்டனர். சோதனையில், ஆயிரக்கணக்கிலான மதுபாட்டில்கள் வாகனத்திற்குள்ளே பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவர, அனைத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், சோலையூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து ஒப்படைத்தனர். இதில், சரக்கு வாகன ஓட்டுநரான ஏழுமலை என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்