காமாட்சி விளக்குகளை பறிமுதல் செய்த பறக்கும் படை

ஆரணியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 35 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 140 காமாட்சி அம்மன் விளக்கு பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2022-01-30 07:23 GMT
ஆரணியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 35 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 140 காமாட்சி அம்மன் விளக்கு பறிமுதல் செய்யப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக ஆரணி - தச்சூர் சாலையில் மண்டல துணை வட்டாட்சியர் குமரேசன் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது ராஜா என்பவர் வந்த இருச்சக்கர வாகனத்தை சோதனையிட்டதில் ஆவணிமின்றி 140 பித்தளை காமாட்சி அம்மன் விளக்குகள் எடுத்து செல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து பறிமுதல் செய்த விளக்குகள் ஆரணி கருவூலத்தில் ஒப்படைப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்