பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

"குடியரசு தின அணிவகுப்பு விழாவில் தமிழகத்தின் ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது" என்று பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2022-01-17 12:17 GMT
குடியரசு தின அணிவகுப்பு விழாவில் தமிழகத்தின் சார்பில் செல்லும் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், வ.உ.சி., பாரதியாரின் உருவங்கள் அடங்கிய ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், தமிழகம் மட்டுமல்லாது மேற்கு வங்கம் உட்பட பல்வேறு மாநிலங்களின் ஊர்திகளுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில்,  குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்