செம்மொழி தமிழாய்வு நிறுவனம் - பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
சென்னை பெரும்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் நாளை திறந்து வைக்கிறார்.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை தரமணியில் உள்ள தற்காலிக கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியில் சுமார் 24 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் அமைக்கும் பணி கடந்த 2017ம் ஆண்டு தொடங்கியது.
70 ஆயிரம் சதுர அடியில் மின்னணு நூலகம் உள்ளிட்ட 12 பிரிவுகளை கொண்ட பிரமாண்டமாக இந்த கட்டடம் அமைக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், 11 புதிய மருத்துவ கல்லூரிகளை நாளை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கும் பிரதமர் மோடி,
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய கட்டிடத்தையும் திறந்து வைக்க உள்ளார்.