தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளுக்கு வாய்ப்பு - முதல்வர் ஆலோசனை

ஒமிக்ரான் மற்றும் கொரோனா பரவலை தடுக்க அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக தலைமை செயலகத்தில் மருத்துவ துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை.

Update: 2022-01-04 06:06 GMT
ஒமிக்ரான் மற்றும் கொரோனா பரவலை தடுக்க அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக தலைமை செயலகத்தில் மருத்துவ துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

இதனிடையே தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதன்படி  இரவு நேர ஊரடங்கு,  கோவில்களில் பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது, கல்லூரிகளில் வகுப்புகளை முறைப்படுத்துவது, கடைகள் செயல்படும் நேரம் குறைப்பு போன்ற  பல்வேறு முக்கிய விவரங்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என தகவல். 


Tags:    

மேலும் செய்திகள்