அரசு பேருந்துக்குள் மழை நீர் - ரெயின் கோட் அணிந்து பேருந்தை இயக்கிய ஓட்டுநர்
அரசு பேருந்துக்குள் மழை நீர் ஒழுகியதால், ஓட்டுநர் ரெயின் கோட் அணிந்து பேருந்தை ஓட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அரசு பேருந்துக்குள் மழை நீர் ஒழுகியதால், ஓட்டுநர் ரெயின் கோட் அணிந்து பேருந்தை ஓட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் இருந்து நாகர்கோவில் செல்லும் பேருந்தின் மேற்கூரை சேதமடைந்து இருந்ததால், மழைநீர் ஒழுகியது. இதனால் பயணிகள் குடை பிடித்தவாறு பயணித்தனர். இந்நிலையில் ஓட்டுநர் அமரும் பகுதியிலும் தண்ணீர் சிந்தியதால், ஓட்டுநர் ரெயின் கோட் அணிந்து கொண்டு பேருந்தை இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.