10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிவிப்பை தற்போது பார்ப்போம்............
"10 மாவட்டங்களில் மிக கனமழை"
"சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்"
"வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு"
"13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்"
திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்யும்
சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும்
நீலகிரி, தென்காசி, கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும்
"கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்"
நாளை வட கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும்
நாளை அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரியில் கனமழை பெய்யும்
"திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
"கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்"
கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
வரும் 29 ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும்
இதன் காரணமாக தமிழகத்திற்கு தற்போது எந்த பாதிப்பும் இல்லை