ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி - அலாரம் அடித்ததால் கொள்ளையன் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.

Update: 2021-10-28 09:49 GMT
ஏரிப்பாளையம் என்ற பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு அதிகாலை 2 மணியளவில் மர்மநபர் ஒருவர் வந்துள்ளார்.  முகத்தில் துண்டால் சுற்றிக்கொண்டு ஏடிஎம் மையத்திற்கு வந்த அந்நபர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நீண்ட நேரம் முயற்சித்த போதும் அவர் ஏடிஎம் இயந்திரத்தின் முன்புற கதவை மட்டுமே திறந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் பணம் வைத்திருக்கும் பெட்டகத்தை உடைக்க முயற்சித்த போது அங்குள்ள அலாரம் ஒலித்துள்ளது. இதனால் பதற்றமடைந்த கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்