காகித ஆலையில் சட்டவிரோதமாக பணி- 25 பேரை ரயில் நிலையத்தில் இறக்கிய நிறுவனம்
விருதுநகர் ரயில் நிலையத்தில் தவித்த வெளிமாநில தொழிலாளர்களை மீட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஏழு சிறுவர்கள் உள்பட 25 பேரும், சிவகாசியில் உள்ள தனியார் காகித ஆலையில் பணிபுரிந்தது தெரியவந்துள்ளது. சத்தீஸ்கர் மாநில தொண்டு நிறுவனத்தின் புகார் காரணமாக, தங்களை விருதுநகர் ரயில்நிலையத்தில் ஆலை நிர்வாகம் விட்டு சென்றதாக அவர்கள் கூறினார்கள்.