தாக்கப்பட்ட மன வளர்ச்சி குன்றிய மாணவர் - 4 பேர் மீது வழக்குப்பதிவு

ராமநாதபுரம் மாவட்டம் மாரியூரில் மன வளர்ச்சி குன்றிய மாணவரை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-10-01 13:31 GMT
ராமநாதபுரம் மாவட்டம் மாரியூரில் மன வளர்ச்சி குன்றிய மாணவரை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 11 ஆம் வகுப்பு படிக்கும் மன வளர்ச்சி குன்றிய மாணவர் ஒருவர், அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் மிட்டாய் திருடி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால், அக்கிராமத்தை சேர்ந்த ஊர் பெரிவர்கள் சிலர், சிறுவனை பொது இடத்திற்கு அழைத்து வந்து, பொதுமக்கள் முன்னிலையில் கடுமையாக தாக்கி உள்ளார். இது தொடர்பான, வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், முசாபர் அடிமை, முத்து முகம்மது, செய்யது அபுதாஹிர், அமீர் என்ற 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளன​ர்
Tags:    

மேலும் செய்திகள்