"உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியாது" - சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு
வாக்காளர் பட்டியலில் தவறு நடந்துள்ளது என்பதற்காக உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகாவில் உள்ள இச்சிபுத்தூர் கிராத்தில் இருக்கும் 8வது வார்டில், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்தி புது வாக்காளர் பட்டியல் வெளியிடும் வரை தேர்தலை நடத்தக் கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், அக்டோபர் 6ம் தேதி தேர்தல் நடத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள், வாக்காளர் பட்டியலில் பெயர்கள் தவறாக சேர்க்கப்பட்டுள்ளது என்ற காரணத்திற்காக தேர்தலை தள்ளிவைக்கும்படி உத்தரவிட முடியாது என்று தெரிவித்தனர். அத்துடன், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்த நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.