மின்வாரியத்தில் வேலை பெற்று தருவதாக மோசடி - தலைமைச் செயலக ஊழியர் கைது

மின்வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் தலைமைச் செயலக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-21 05:12 GMT

சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியர் பழனிக்குமார் என்பவர் வீடு முன் கடந்த 10ஆம் தேதி தேனி பாலகிருஷ்ணன் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மின்சார வாரியதிதல் வேலை வாங்கி தருவதாக பாலகிருஷ்ணனிடம், பழனிக்குமார் 10 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு, திருப்பி வழங்காத‌து தெரியவந்த‌து. இதையடுத்து பழனிக்குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில், இந்த முறைக்கேட்டில் தலைமை செயலகத்தில் பணியாற்றும் பரமசிவம் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்த‌து. இதையடுத்து பரமசிவத்தை கைது செய்த சூளைமேடு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்