தருமபுரம் ஆதீன திருமண மண்டபம் : "ஆய்வுக்கு பிறகே சான்றிதழ் வழங்க வேண்டும்" - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருமண மண்டபம் விதிகளுக்கு உட்பட்டு கட்டபடுகிறதா என்பதை ஆய்வு செய்த பிறகே பணி முடிப்பு சான்றிதழ் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-09-14 02:13 GMT
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருமண மண்டபம் விதிகளுக்கு உட்பட்டு கட்டபடுகிறதா என்பதை ஆய்வு செய்த பிறகே பணி முடிப்பு சான்றிதழ் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமசந்திரன் என்பவர் தொடர்ந்த பொதுல வழக்கை விசாரித்த நீதிபதிகள்  உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி பெறப்பட்டு திருமண மண்டபம் கட்டுப்படுகிறதா என்பதை கிராம தனி அலுவலர் கண்காணிக்க வேண்டுமென உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்