சென்னை பெருங்களத்தூரில் லாரி மீது கார் மோதி கோர விபத்து - 5 பேர் உயிரிழப்பு

பெருங்களத்தூர் அருகே நடந்த கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Update: 2021-09-05 03:41 GMT
பெருங்களத்தூர் அருகே நடந்த கோர விபத்தில் 5 பேர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சென்னை துரைப்பாக்கத்தில் படித்த மேட்டூர், திருச்சி, புதுக்கோட்டையை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் சென்னையில் உள்ள நண்பர்களை காண வந்துள்ளனர். அப்போது, நண்பர்களை சந்தித்துவிட்டு திரும்பிய போது பெருங்களத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மீது கார் மோதியது. இதில் நிலை தடுமாறிய கார், அங்கு இரும்பு கம்பிகளை ஏற்றி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியது. இதனால், லாரிக்கு அடியில் சிக்கிய கார் நொறுங்கியதில், காரில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்