தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் - மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி

Update: 2024-05-06 01:56 GMT

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில், சித்திரை திருவிழா கடந்த 28ம் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் எட்டாம் நாளில், நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ரெங்கவிலாச மண்டபத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்த நம்பெருமாள், வையாளி கண்டு பக்தர்களுக்கு அருள் வழங்கினார். விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டத்திற்கு, உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்