நரம்பியல் மருத்துவர் கொலை வழக்கு : "குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள்" - தண்டனை விவரங்கள் பிற்பகல் அறிவிப்பு

பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் ஒன்பது பேர் குற்றவாளிகள் என சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Update: 2021-08-04 08:49 GMT
கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி நரம்பியல் மருத்துவர் சுப்பையா சென்னை ராஜா அண்ணாமலைப்புரத்தில் கூலி படையினரால் கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் மருத்துவர் மரண வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை அமர்வு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட ஒன்பது பேரும் குற்றவாளிகள் என தெரிவித்துள்ளது. கைதான 10 பேரில் அய்யப்பன் என்பவர் சரணடைந்த நிலையில், எஞ்சிய ஒன்பது பேர் குற்றவாளிகள் என அறிவித்த நீதிமன்றம், தண்டனை விவரங்களை இன்று பிற்பகலில் வெளியிடுகிறது. தற்போது அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்