வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 67 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருப்பு

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 67 லட்சத்திற்கும் அதிகமானோர் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Update: 2021-07-23 14:12 GMT
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 67 லட்சத்திற்கும் அதிகமானோர் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 67 லட்சத்து 76 ஆயிரத்து 945 பேர் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 24 முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள் 24 லட்சத்து 88 ஆயிரத்து 254 நபர்கள் என்றும், 36 முதல் 57 வயதிற்குட்பட்டவர்கள், 12 லட்சத்து 26 ஆயிரத்து 417 நபர்கள் எனவும், 

58 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10 ஆயிரத்து 907 நபர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மொத்தம் 1 லட்சத்து 36 ஆயிரத்து 515 மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து காத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 85 ஆயிரத்து 310 பட்டதாரி ஆசிரியர்களும்,

2 லட்சத்து 42 ஆயிரத்து 711 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும் அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்