தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை - நாகராஜனின் ஜாமின் மனு தள்ளுபடி

தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பயிற்சியாளர் நாகராஜனின் ஜாமின் மனுவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Update: 2021-06-11 13:53 GMT
சென்னை பிராட்வே பகுதியில் தடகள பயிற்சி மையம் நடத்தி வந்த நாகராஜன் என்பவர் பயிற்சிக்கு வந்த மாணவிகளிடம் அத்துமீறியதாக கைது செய்யப்பட்டார். 5 பிரிவுகளின் கீழ் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ஜாமின் கோரி அவர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி முகமது பரூக் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது 
விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது என காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, நாகராஜனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்