உழைப்பாளர் தினம் - வரிசையாக வாழ்த்து சொன்ன தலைவர்கள்

Update: 2024-05-01 03:53 GMT

மே 1 உழைப்பாளர் தினத்தையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உழைக்கும் தொழிலாளர்களின் குடும்பங்கள் கல்வி, பொருளாதார நிலைகளில் உயர்ந்து உன்னத நிலையை அடைய வேண்டும் என்று, வாழ்த்தியுள்ளார். இதே போன்று, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தியில், அ.தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்பட்டதாக தெரிவித்தார். நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்