திடீர் மாற்றம்.. தேர்தல் ஆணையம் ஷாக் அறிவிப்பு

Update: 2024-05-01 04:08 GMT

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனந்தநாக் மக்களவைத் தொகுதியில், வரும் மே 7-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மே 25-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. போக்குவரத்து, தகவல் தொடர்பு, இயற்கையான தடை போன்ற பல்வேறு காரணங்களால் தேர்தல் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதனடிப்படையில், தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அந்த தொகுதியில் இந்தியா கூட்டணியில் சார்பில் பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி போட்டியிடுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்