சர்ச்சையில் சிக்கிய பாஜக பிரமுகர்.. அடித்து நொறுக்கிய போலீஸ்.. "குடும்பத்தையே குண்டு கட்டாக தூக்கி."

Update: 2024-05-01 03:46 GMT

புதுச்சேரி கரசூர் கிராமத்தில் பாஜக பிரமுகர் செல்வராசு உள்பட பலரிடம் இருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் நிலம் கையகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர் அந்த நிலத்தில் வீடு கட்டி வந்தார். அவருக்கான இழப்பீட்டு தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்ட நிலையில், அவருடைய வீடு போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டது. எதிர்ப்பு தெரிவித்த செல்வராசு குடும்பத்தை சேர்ந்தவர்களை போலீசார் குண்டு கட்டாக வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையம் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்