இளைஞர் வெட்டி படுகொலை; கஞ்சா புகைப்பதில் தகராறா? - மணலி போலீசார் விசாரணை

சென்னை மணலியில் கஞ்சா புகைப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

Update: 2021-05-31 03:34 GMT
சென்னை மணலியில் கஞ்சா புகைப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பாடசாலை தெருவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார், உயிரிழந்தவர் அன்பழகன் தெருவைச் சேர்ந்த சாக்ரடீஸ் என்பதும், இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இளைஞர் இறந்த இடத்தில் கஞ்சா பொட்டலங்கள், மது பாட்டில்கள் இருந்ததால் கஞ்சா புகைப்பதில் ஏற்பட்ட மோதல் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என, போலீசார் சந்தேகித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்