ஊரடங்கை ரத்து செய்ய கோரிய மனு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்க கோரிய வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது,.

Update: 2021-05-05 11:25 GMT
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்க கோரிய வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது,. இது தொடர்பான பொது நல மனு மீதான விசாரணையின் போது, பல மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் பொது போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது,. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்

Tags:    

மேலும் செய்திகள்