"1000 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தயார்" - வேதாந்தா நிறுவனம் வெளியிட்ட தகவல்

ஸ்டெர்லைட் ஆலையில் 1000 டன் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தயாராக உள்ளோம் என வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-27 02:10 GMT
ஸ்டெர்லைட் ஆலையில் 1000 டன் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தயாராக உள்ளோம் என வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் ஆக்சிஜனை விநியோகம் செய்வது குறித்து நிபுணர் குழுவுடன் ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தை அடுத்து, நாடு முழுவதும் ஆக்சிஜன் விநியோகம் செய்யவும் ஆலோசித்து வருவதாக வேதாந்தா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்