சாலையில் கிடந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்

இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்ற மாநகராட்சி ஊழியர்களுக்கு, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2021-04-07 02:28 GMT
சென்னை வேளச்சேரியில் 2 மாநகராட்சி ஊழியர்கள், இருசக்கர வாகனத்தில் 4 வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்று கொண்டிருந்தனர். அப்போது கை நழுவி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சாலையில் விழுந்தன. இதைப் பார்த்த திமுகவினர் மற்றும் பொதுமக்கள், வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரத்தை எடுத்துச் செல்வதாக கூறி, மாநகராட்சி ஊழியர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ஊழியர்களை வேளச்சேரி காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். வாக்குச்சாவடியில் கூடுதலாக வைக்கப்பட்டிருந்த பயன்படுத்தாத இயந்திரங்கள் என்று அவர்கள் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, மாநகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்