தமிழக மீனவர்கள் கைது விவகாரம் : அதிமுக அரசும், இந்திய அரசும் பொறுப்பு.. - திருமாவளவன் விமர்சனம்

தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இருப்பதற்கு தமிழக அரசும் இந்திய அரசும் பொறுப்பேற்கவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-03-25 13:01 GMT
தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இருப்பதற்கு தமிழக அரசும் இந்திய அரசும் பொறுப்பேற்கவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கச்சத்தீவை மீட்பது தான் மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர  தீர்வாக அமையும் என்றார். அதிமுக, பாமக, பாஜக கூட்டு சேர்ந்திருப்பது தீங்கு விளைவிக்கக்கூடிய கூட்டணி என்பதால், அதுவே திமுகவிற்கு வெற்றியைத் தரும் எனவும் திருமாவளவன் விமர்சித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்