தொகுதி பங்கீடு - சுமூக பேச்சுவார்த்தை - முருகன்

தொகுதி பங்கீடு குறித்து அதிமுகவுடன் சுமூகமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-02-28 03:23 GMT
தொகுதி பங்கீடு குறித்து அதிமுகவுடன் சுமூகமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். சென்னை திநகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மூன்றாவது அணியால் அதிமுக கூட்டணிக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாது என குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள இன்னும் பல தேசிய தலைவர்கள் வருகை தர உள்ளதாக தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்