"அதிமுக கொடியை பயன்படுத்தும் விவகாரம்" : வழக்கறிஞருடன் சசிகலா தீவிர ஆலோசனை

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவது குறித்து, சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருவதாக, வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-02-15 02:27 GMT
அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவது குறித்து, சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருவதாக, வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயநகரில் உள்ள இல்லத்தில் சசிகலாவை, வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். பின் அங்கிருந்து புறப்பட்ட அவர், அதிமுக கொடியை பயன்படுத்துவது மற்றும் சட்டமன்ற தேர்தலில் சசிகலா போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.   

Tags:    

மேலும் செய்திகள்